கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, June 6, 2014

கூழாங்கற்கள்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சொன்ன கரிசல் கதைகளை கழனியூரன் தொகுத்த சுவையான கதைப் புத்தமொன்று இருக்கிறது, செவக்காட்டுக் கதைகள் என்று.. அதில் திருநெல்வேலிஎன்ற பெயர் எப்படி வந்ததென்ற கதை சுவையானது..
நெல்லயப்பரின் கோயில் நமக்குத் தெரியுமல்லவா? அந்தக் கோவில் சிறிய கோயிலாக இருக்கும் போது நடந்த கதையிது. அந்த கோயிலின் குருக்கள் சிறந்த சிவ பக்தர். தினமும் நெல்லை காயப்போட்டு புடைத்து அரிசியாக்கி நைவேத்தியமாக படைப்பாராம் சாமிக்கு. ஒருநாள் இப்படித் தான் தன் வீட்டிலிருந்த சாமிக்கு அளவாக இருந்த எல்லா நெல்லையும் கொட்டி (வறுமையைப் பாருங்கள்) காய வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்று விட்டாராம். மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத போதும், மின்னல் வெட்டிக் கொண்டு மழை வலுவாக பெய்ய ஆரம்பித்து விட்டதாம், அய்யோ என்றாகிவிட்டது குருக்களுக்கு. நம்மிடம் இருந்த நெல் எல்லாவற்றையும் காய வைத்து விட்டு வந்தோமெ? மழையில் நனைந்து விட்டால், எப்படி புடைத்து அரிசியாக்குவது?’ என்று நினைத்துக் கொண்டே, மழையைப் பொருட்படுத்தாமல், ஓடியோடி வந்தாராம். வந்தவருக்கும் ஒரே ஆச்சர்யம். தான் நெல் கொட்டி வைத்திருந்த பகுதியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நனைந்திருந்ததாம். இதி நிச்சயம் கடவுள் விளையாட்டு தான் என்று உணர்ந்து கொண்ட போது ஊரே கூடிவிட்டது இந்த அற்புததைப் பார்க்க.. குருக்கள் அந்த நெல்லை, மூட்டையாக கட்டி பொக்கிஸமாக வைத்துக் கொண்டார். ஊர் மக்கள் இறைவனுக்கு தங்கள் வீட்டிலிருந்து நெல்லை கொண்டு வந்து கொட்டிக் கொட்டி கொடுத்தனராம். நெல்லுக்கு வேலியமைத்தாற் போல இருந்து நெல்லை நனையாமல் காப்பாற்றியதால், அந்த பகுதிக்கு திருநெல்வேலிஎன்று பெயர் அமைந்து விட்டதாம். இறைவனும் நெல்லையப்பர் என்று அழைப்படலானார்.
இந்தக் கதையைப் படித்தவுடன், பார்க்கும் படிக்கும் எல்லா ஊர்ப் பெயர்களுக்கும் காரணப் பெயர் இருக்கக் கூடும்.அதை அறிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. கூடவே சிவனார் மேல் இருக்கும் பக்தியும்.

http://maattru.com

No comments: