கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, May 16, 2014

நனவிடைத் தோய்தல்-1



தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.
நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.
அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.
தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.
அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.
தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .
அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.
கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.
எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.
அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.
மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.
வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.
‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.
மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.
தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.
” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.


தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. - See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf
நனவிடைத் தோய்தல்
நனவிடைத் தோய்தல்
நனவிடைத் தோய்தல்
தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. - See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf
தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.



நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.



நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.



அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.





தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.



அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.



தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .





அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.



கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.





எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.





அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.





மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.



வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.



கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.



‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.



மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.



தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.



” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.
- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpufதி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.

நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.

அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.


தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.

அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.

தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .


அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.

கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.


எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.


அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.


மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.

வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.

கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.

‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.

மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.

தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.

” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.
- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf
தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.

நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.

அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.


தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.

அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.

தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .


அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.

கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.


எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.


அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.


மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.

வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.

கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.

‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.

மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.

தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.

” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.
- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf
தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.

நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.

அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.


தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.

அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.

தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .


அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.

கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.


எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.


அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.


மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.

வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.

கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.

‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.

மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.

தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.

” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.
- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf

No comments: