கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-13

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகளின் சித்தர் பீடம் முல்லா வீதியில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கி இறை பிரச்சாரம் செய்தவர். இவர் சவப்பெட்டி ஊர்வலத்தில் பிரெஞ்சு கவர்னரும் கலந்து கொண்டனர் என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது.

இவரின் சிறப்பு, இவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும் சவப்பெட்டியை கவர்னர் திறந்து பார்க்க ஆவல் கொண்டு திறந்து பார்க்கையில் மகானின் உடல் சற்றும் அழுகாமல் இருந்தது.

No comments: