கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-19

 பொன்னிறத்து அம்மன்


கொலையில் உதித்த தெய்வங்களின் வரிசையில்தான் பொன்னிறத்து அம்மன் என்ற சிறு தெய்வமும் வருகிறது.வாழவேண்டிய ஒரு இளம்பெண் அநியாயமாக பிறரின் சூழ்ச்சியால் அல்லது கொடுமதியால் கொலை செய்யப்படும்போது அப்பெண்ணின் பிரிவை சொந்தபந்தங்களும் உற்றார் உறவினர்களும் தெய்வநிலைக்கு கொண்டு சென்று வணங்க தொடங்கி விடுகின்றனர்.அப்படிப்பட்ட சிறு தெய்வமான பொன்னிறத்து அம்மன் என்ற குறுஞ்சாமியின் சோகக் கதையை இனி பாப்போம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் என்ற ஊரில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தநாள் பொன்னிறத்தாள் பெயருக்கு ஏற்ற மாதிரியே அவள் பொன் நிறத்தில் இருந்தாள் அவளுக்கு ஏழு அண்ணன்மார்கள் இருந்தார்கள் இவள் எட்டாவதாக பிறந்த பெண் குழந்தை.
ஏழு அண்ணன்மார்களுக்கும் ஒரே தங்கை என்பதால் ஏழு அண்ணன்மார்களும் ஒத்தகு தங்கையான பொன்னிறத்தாள் மேல் பாச மழை பொழிந்தார்கள் இப்படி வளர்ந்த பொன்னிறத்தாள் நாளாவட்டத்தில் வாலிபப் பருவத்தை அடைந்தாள்.
கன்னிப் பொண்ணான தன் தங்கையை அண்ணமார்கள் ஏழு பேரும் கண்ணைப் போல் காத்தார்கள் கலயாண வயது வந்ததும் பக்கத்து ஊரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இரணசூரப்பெருமாள் என்பவனுக்கு முறைப்படி கட்டிக் கொடுத்தார்கள் ஏழு அண்ணன்மார்களும் தங்கைக்கு தேவையான சீர் செணத்திகளும் செய்து தந்தார்கள்.
இரணச்சூரப் பெருமாளும் பேருக்கு ஏற்றமாதிரியே வீராதி வீரனாக சூராதி சூரனாக திகழந்தான் என்றாலும் தன் மனைவியான பொன்னிறத் தாளைப்போல தாங்கிக் கொண்டு காலங் கழித்தான் கல்யாணமான மறுமாதமே பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள் ஏழாவது மாதமே நிறைமாத சூலியான தன் செல்ல தங்கச்சியை பேறுகாலத்திற்காக தங்கள் வீட்டிற்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க.
தாய் வீட்டுல பொன்னிறத்தாள் தன் தோழிப் பெண்களுடன் சிரிச்சிப் பேசி விளையாடிக்கிட்டு சந்தோஷமாக இருந்தா ஒரு நாள் சாயங்கால நேரத்துல தோழிப் பிள்ளைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கிற பொய்கைக்கு குளிக்கப்போனாங்க.
பொன்னிறத்தாளும் தோழிப் பெண்களுடன் பொய்கையில் நீராடப் புறப்பட்டாள் ஆனால் அவள் விட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நேரம் பொழுது சாஞ்சிருச்சி பொய்கையோ ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கு நீயோ நிறைமாதக் சூலியாக வேறு இருக்கிறாய் பொய்கைக்கு பக்கத்துல காட்டாளம்மன் கோயில் வேற இருக்கு புள்ள தாச்சியா இருக்க உண்ண காத்துக் கருப்பு அடிச்சிடும் அதனால உன் தோழி நீ உன் தோழிப் பெண்களுடன் குளிக்க போக வேண்டாம் என்று சொல்லி தடுத்தாங்க.
ஆனால் பொன்னிறத்தாள் யார் சொல்லையும் கேட்கவில்லை நான இன்னிக்கு பொய்கையில் நீராடித் தீருவேன் என்று முரண்டுபிடித்தாள் அழுதாள் தங்கை அழுவதைப் பார்த்து மனமிரங்கிய அண்ணன்மார்கள் ஏழு பேரும் நீ விரும்பினா போய் நீராடிட்டி வா ஆனால் ரொம்ப ஜாக்கிரதையாப் போயிட்டு பத்திரமா விடு திரும்பணும் என்று புத்திச்சொல்லி தங்கச்சியை தோழிமார்களுடன் நீராட செல்ல அனுமதிச்சாங்க.
தோழிப்பெண்களுடன் பொன்னிறத்தாள் பொய்கையில் இறங்கி நீராடிக்கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த சூறைக்காத்து விசிச்சி காத்தை தொடர்ந்து மழை கொட்டோன்னு கொட்டுச்சி இடி சடசடன்னு இடித்தது மின்னலும் கண்ணைப்பறிக்கும் படியா வெட்டிச்சி பொய்கையில குளிச்சிகிட்டு இருந்த பெண் பிள்ளைகள் குளித்தது போதும்னு நினைச்சி கரைஏறி தங்கள் தங்கள் துணி மணிகளை கையில் எடுத்துகிட்டு அவசர அவசரமா அந்த இடத்தை விட்டு கிளம்பி ஊரைப் பார்த்து நடக்க ஆரம்பிச்சிட்டாங்க.
தோழிப்பெண்கள் எல்லாரும் அவரவர் உயிரைக் காப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் தவிர பொன்னிறத்தாளை பற்றி பற்றி அப்போது கவலைப்படவில்லை இளவட்டபிள்ளைகல் அத்தனைப்பேரும் வேகமாக ஊரைப்பார்த்து நடந்தார்கள் அவர்களில் ஒருத்தருக்கும் பிள்ளைத்தாச்சியான பொன்னிறத்தாளை பிற்றிய நினைப்பு இல்லை நிறைமாத சூலியாக இருந்ததாள் பொன்னிநிறத்தாளால் வேகமாக பொய்கையின் கரையை அடையமுடியவில்லை தத்தி புத்தி பொய்கையின் கரையை அடைந்து ஏறிட்டுப் பார்த்தாள் தோழிப்பெண்கள் ஒருத்தரையும் காணவில்லை.
மழை மேகம் சூழ்ந்ததால் இருள் கவிழ்ந்துவிட்டது மழையும் சோ வென்று பெய்தது பொன்னிறத்தாளுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை என்றாலும் இடியோடும் மழையோடும் கால்போன போக்கில் நடக்க ஆரமித்தாள் இருட்டுக்குள்ளும் மழைக்குள்ளும் திசை தெரியாததால் ஊருக்கு செல்லும் ஒத்தையடிப் பாதை விட்டுவிடு காட்டுக்கு செல்லும் பாதையில் நடக்க ஆரமித்தாள்.
திடீரன்று மழை பெய்ததால் இடி இடித்ததால் பதைத்து போன பொன்னிறத்தாளின் அண்ணன்மார்கள் ஈருயிர்க்காரியான தாய ஒரு உயிர் தாயின் வயிற்றில் உள்ள பிள்ளை ஒரு உயிர் ஆக ஈருயிர் தங்கைச்சியை தேடி அவளுடன் சென்ற தோழி பெண்கள் விட்டில் விசாரித்தார்கள்.
தோழிப்பெண்கள் அனைவரும் நாங்கள் பார்க்கவில்லை பொன்னிறத்தாளை என்று கை விரித்தார்கள் அண்ணன்மார்கள் ஏழுபேரும் இடியோடும் மழையோடும் தங்கச்சியை தேடி பொய்கைக்கு போனார்கள் இருளோ குகையாக இருந்தது மழையோ விடாது பெய்தது அண்ணன்மார்கள் அழுதபடியே தங்கச்சியை தேடி அலைந்தார்கள்.
பொன்னிறத்தாளோ இருட்டில் வழி தெரியாமல் நடுக்காட்டை நோக்கி மழையில் நனைந்து நடுங்கியபடியே சென்றாள் காலும் கையும் மனசும் சோர்ந்ததால் ஒரு ஆலுமரத்தின் அடியில் போய் ஒண்டினாள் அண்ணன்மார்கள் சொன்ன சொல்லைக் கேளாமல் பொய்கையில் நீராட வந்து இப்பட் காட்டுக்குள்ள மழையில் நனைகிறோமே என நினைத்து பொன்னிறத்தாளுக்கு கண்களில் கண்ணிர் பெருகியது.
நேரம் செல்ல செல்ல அணணன்மார்கள் ஏழு பேரும் தங்கை இனி நமக்கு கிடைப்பாள் என்ற நம்பிக்கையை இழந்தார்கள் மழை ஈரத்தில் கால் வழுக்கி பொய்கையில் விழுந்ததால் அடிப்பட்டுக் கிடப்பாளோ என்று நினைத்து அவர்களும் அழுதார்கள்.
மழை பெய்யாவிட்டாலும் தீப்பந்தத்தை எடுத்துகிட்டு வந்து தேடலாம் ,மழையும் விடாமல் பெய்தது இருட்டோ கொய் என்று இருந்தது ஒரு வேளை இன்னேரம் எங்க சுத்தியாவது தட்டுண்டு தடுமாறி விடிபோய் சேர்ந்திருப்பாளோ என்று நினைத்து அண்ணன்மார்கள் ஏழு பேரும் வீடு வந்து பார்த்தனர் அங்கும் தங்கை வராதது கண்டு இனி என்ன செய்ய ஏது செய்ய என்று அண்ணன்மார்கள் கை பிசைந்து நின்னாங்க.
நடுகாட்டில் ஆலமரத்தின் தூரில் ஒண்டியபடியே உக்கார்ந்து விட்டால் பொன்னிறத்தாள் மழை ஒரு மாதிரி நடுச்சாம வேளையில் ஒய்ந்தது அவளுக்கு இருட்டில் மழை வெள்ளத்தில் திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை இனி இந்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது நடக்கதுநடக்கட்டும் இனிநம்மை கடவுள்தான் காப்பாத்தணும் எப்படியாவது பல்லைக்கடித்துக்கொண்டு ராப்பொழுதை இங்கே கழிப்போம் விடிந்ததும் வீடு போய் சேருவோம் என மனதிற்குள் திட்டம் போட்ட பொன்னிறத்தாள் அப்படியே அந்த ஆலமரத்தின் அடியில் ஈரத்துணியுடன் ஒண்டியபடியே இருந்தாள்.
அன்று நிறைந்த அமாவாசை வேறு அமாவாசை ராத்திரிகாக காத்திருந்த நாலைந்து திருடர்கள் மழை வெறித்ததும் காட்டுவழியே வந்தாங்க அமாவாசை அன்னைக்கு ஏதாவது ஒரு உசுப்பிராணியை பலி கொடுத்து காட்டாளம்மன் கோயிலுக்கு பக்கத்துல இருக்கிற புதையல எடுக்கணும்கிற தீட்டத்தோட வந்துகிட்டு இருந்தாங்க திருடர்களில் ஒருத்தன் தோளில் ஒரு சூலோட்டை சுமந்துகிட்டு வந்தான் சூலாட்டை அமாவாசை அன்னைக்கு நடுச்சாமத்துல பலி கொடுத்து புதையலை எடுக்கணும்கிற அந்த திருடர்களின் திட்டம் திருடர்கள் காட்டு வழியாக வரும்போது ஈனசுரத்தில் ஒரு பெண் முனங்கும் சத்தம் கேட்டது அது மோகின் பேயின் சத்தமாக இருக்குமோ என்று நினைத்து பயந்தார்கள் திருடர்கள் கூர்ந்து கவனித்த பிறகு ஆலமரத்தடியில் ஒரு பெண் பம்மிகொண்டு இருப்பது அந்த இருட்டிலும் துலம்பாக தெரிந்தது.காரணம் பொன்னிறத்தம்மாளின் பொன் போன்ற நிறம் இருளிலும் ஜொலித்தது.
திருடர்களில் ஒருத்தன் பொன்னிறத்தாளின் கிட்டபோய் பார்த்து போது தான் நிறைமாத சூலி அவள் என்ற விபரம் புரிந்தது அந்த இருட்டிலும் பளிச்சென்று அவளின் பொன் நிறம் அவள் இருக்கும் இடத்தைக் காட்டி கொடுத்தது.
புதையல் எடுக்கச் சூலாட்டைப் பலி கொடுக்க வேண்டும் என்று நினைத்து வந்த திருடர்களுடன் ஒரு மாந்திரீகனும் இருந்தான் அவனின் மூளை குரோதமாய் வேலை செய்தது சூலாட்டிற்கு பதில் நிறை மாத கர்ப்பிணியான அப்பெண்னை பலி கொடுத்தால் புதையலைக் காத்து நிற்கும் வாதை(பூதம்)மகிழ்ச்சியுடன் ஊட்டை (நரபலியை)ஏற்றுக்கொண்டு புதையலை தந்துவிடும் என்று ஒரு கெட்ட யோசனையை சொன்னான்.
புதையல் ஆசையில் இருந்த மற்றதிருடர்களும் நாம தேடிப்போகாம முகலட்சணமான நிறைமாத சூலி பெண் கையில் மாட்டி இருக்கிறாள் எனவே அவளையே சூலாட்டிற்கு பதில் பொலிப்போட்டு கொடுத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்தார்கள்.
தன்னை மறந்த நிலையில் மயங்கியபடி மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி துணிகள் எல்லாம் தாறுமாறாக விலகிய நிலையில் கிடந்த பொன்னிறத்தாளின் ஜொலிப்பான தேகம் திருடர்களுடன் நின்ற பூசாரியின் காம உணர்ச்சியைக் கிளரியது.
திருடர்களில் ஒருத்தன் பொன்னிறத்தாளின் அருகில் போய் அவளைத் தட்டி எழுப்பி அம்மா தாயே நீ யார்?ஏன் இந்த அர்த்த ராத்திரியில் நடுக்காட்டில் இந்த இடத்தில் ஈரச்சேலையுடன் உக்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டான்.
மயங்கிய நிலையில் கண்ணை மூடிக்கிடந்த பொன்னிறத்தாள் மயக்கம் தெளிந்து லேசாகக் கண் விழித்துப் பார்த்தாள் அடர்த்தியான அந்த இருட்டில் தன் முன்னால் நாலைந்து மனித உருவங்கள் நிற்பது மங்கலாக தெரிந்தது அவள் கண்களுக்கு.
நட்ட நடு நிசி நடுக்காடு அமாவாசை இருட்டு தன்னந்தனியாக நனைந்த சூலாடு போன்ற நாம் எதிரில் நாலைந்து முரடர்கள் அவர்களில் சிலர் கையில் அருவாள் கத்து போன்ற ஆயுதங்கள் இன்னும் ஒருத்தன் கையில் உடுக்கை போன்ற இசைக்கருவி இன்னொருவன் கையில் தோளில் சூல் அடு பக்கத்தில் காட்டம்மாள் கோவில்.
இத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை எத்தனை பாட்டிகளிடம் எத்தனை நாள் கதை கதையாக கேட்டிருக்கிறாள் பொன்னிறத்தாள் எனவே இனி என்னென்ன வீபரிதம் நடக்கும் என்பதை தன் மனத்திரையில் திரைப்பிம்பமாக ஒட்டிப் பார்த்த பொன்னிறத்தாள் இனி நம்மகதி அதோ கதிதான் என்று நினைத்தவள் மயக்கமுற்று ஈரத்தரையில் சாய்ந்தாள்
திருடர்களில் ஒருத்தன் மயக்கமாகி தரையில் சாய்ந்த பொன்னிறத்தாளின் நாசியின் மேல் தன் கையை வைத்து அவளுக்கு உயிர் இருக்கிறதா?என்று பார்த்தான் லேசான மூச்சுக்காற்றின் உஸ்ணம் அவன் விரலில் பட்டது திருடன் மற்றவர்களை பார்த்து அவள் நம்மை பார்த்து மயங்கித்தான் தரையில் விழுந்து கிடக்கிறாள் ஆனால் அவள் உயிர் இருக்கிறது என்றான்.
அப்படியானால் சூலாட்டை இறக்கி தரையில் விட்டு விட்டு இந்த பெண்ணை தூக்கி கொண்டு சென்று விடுவோம் புதையல் இருக்கும் இடத்திற்கு என்றான் திருடர்களில் ஒருத்தன்.
பூசாரி சூலாடும் இருக்கட்டும் இவளையும் தூக்கி வாருங்கள் என்றான் பூசாரியின் பக்கத்தில் நின்ற திருடர்களில் ரெண்டு பேரில் பொன்னிறத்தாளின் தலையை ஒருத்தனும் காலை ஒருத்தனும் பிடித்து தூக்கி மூன்றாவதாக நின்ற திருடன் அவள் உடம்பின் நடுப்பகுதியை பிடித்து கொள்ள மூவருக்கும் சேர்ந்து பொன்னிறத்தாளை செந்தூக்காக தூக்கிகொண்டு புதையல் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
பூசாரி சொன்ன இடத்தில் அவளைக் கிடத்தினார்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி பக்கத்து மரத்தில் இருந்து கத்ச்ச(நேரான)சில கம்புகளை வெட்டிக்கொண்டு வந்து குழிதோண்டி நட்டி தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த கயிற்றின் உதவியால் கம்பு கழுக்கைகளை கட்டி அவசரகதியாக ஒரு பரணை உருவாக்கினார்கள்.
பொன்னிறத்தாள் நனைந்த வாழைத்தடையாக மயங்கிய நிலையிலேயே கிடந்தாள் பூசாரியின் ஆழ் நெஞ்சில் காம நெருப்பு கனன்று கொண்டே இருந்தது தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமான அருகில் நின்ற திருடர்களின் தலைவன் போன்றவனின் காதிற்கு குசு குசு ஏதோ சொன்னான் பூசாரி.
உடனே திருடர்களின் தலைவன் கோபமுற்று உமக்கேன் புத்தி இப்படி போகிறது நாம செய்ய போகிற காரியமோ பஞ்சமாபாதகம் ஏதோ பணத்தாசையால் அப்படிச் செய்கிறோம் அத்தோடு நீர் சொல்கிற காரியத்தையும் செய்தால் ஏழேழ் ஜென்மத்திற்கும் நமக்கு குடிக்க கஞ்சும் கிடைக்காது என்று பூசாரியைப் பார்த்து சொன்னான்.
எனவே பூசாரி இந்த திருட்டு பெயல்களை இங்கிருந்து இப்போதைக்கு விலக்க வேண்டும் என்று நினைத்து உடன் நின்ற திருடர்களைப் பார்த்து நீங்கள் அவளை நிர்வாணமாக்கி பரண்மேல் கிடத்தி விட்டு பக்கத்து காட்டில் உள்ள மூங்கில் புதருக்கு சென்று சில மூங்கில் காம்புகளை வெட்டுக்கொண்டு வாருங்கள் அந்த மூங்கில் காம்புகளில் தோதான ஒரு மூங்கில் கம்பில்தான் உழக்கு(முகத்தல் அளவுக்கு உரியது)செய்து புதையலில் கிடைக்கும் பொண்ணை ஆளுக்கு இவ்வளவு என்று அளந்து பங்கு வைக்க வேண்டும் என்றான்.
பூசாரியின் மனதில் இருக்கும் காமக்கறுப்பு பற்றி தெரிந்து கொண்ட திருடர்களின் தலைவன் புதையலில் இருந்து கிடைக்கும் பொன்னைப் பங்கு வைக்கிற வேலையை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம் வாங்காத மாட்டிற்கு பீச்சாத பாலுக்கும் பொண்டாட்டியும் புருசனும் சண்டை போட்ட கதையாக நாம் இப்ப கிடைக்க இருக்கிற புதையலை அளக்கிறதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இப்ப முதலில் நீர் இந்த பெண்ணை அல்லது அந்த சூலாட்டை பலி கொடுத்து புதையலை எடுக்கிற வழியை பாரு நாங்கள் யாரும் புதையலைக் காணாமல் இங்கிருந்து நகரமாட்டோம் நாங்கள் எல்லோரும் காட்டிற்குள் மூங்கில் வெட்டச் சென்ற பின் நீர் சூலியை பலி கொடுத்து கிடக்கும் புதையலை எல்லாம் எடுத்துகொண்டு ஒடி விடலாம் என்று பார்க்கீராக்கும் என்றான்.
பூசாரி இந்த திருட்டு பெயல்களிடம் நம்ம பச்சா பலிக்காது என்பதை புரிந்துகொண்டு அடுத்து மளமளவென்னு பூஜை செய்த் புதையலை எடுப்பதற்காக ஏற்பாடுகளை செய்தான் திருடர்களின் தலைவன் பூசாரியைப் பார்த்து நாம ஏற்கனவே திட்டம் போட்டிருந்த படி இந்த சூலாட்டை பலி கொடுப்போம் பாவம் யார் பெத்த பிள்ளையோ என்ன பாவம் செய்தாளோ இப்படி நடுக்காட்டில் வந்து நம்மிடம் மாட்டி கொண்டாள் சூலாட்டை பலியிட்ட பிறகும் புதையல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு இந்த பெண்ணை பலியிடுவோம் பெண் பாவம் பொல்லாதது அதிலும் ஈருயிருக்காரி இந்த பெண்ணை பார்க்கவே பாவமா இருக்கிறது என்றான்.
பூசாரி எனகென்ன நீங்கிள் செய்கிறபடி சூலாட்டை பலி கொடுப்போம் அதில் புதையல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு இந்த நிறைமாத சூலிபெண்ணை பொலி கொடுப்போம் என்று ஒப்புக்கொண்டான்.
பூசாரிக்கு கையாளாக கையில் உடுக்குடன் வந்திருந்தவன் மளமளவென்னு காரியத்தில் இற்ங்கினான் சூலாட்டை பரண் மேல் தூக்கு போட்டு அதன் நான்கு கால்களையும் நான்கு திருடர்களை நாலாப்பக்கமும் விரித்துபிடிக்க சொல்லி விட்டு கையில் இருந்த உடுக்கையை அடித்து தன் கரகரத்த குரலில் பாட்டொன்றைப் பாடினான்.
அர்த்த ராத்திரியில் இலை குலுங்காத அந்த ஜாமத்தில் பூசாரியின் கையால் த்ட்டிய உடுக்கையின் சத்தமும் அவனது முரட்டு குரலும் காடுகரை எங்கும் மோதி எதிரொலித்தது உடுக்கை சத்தம் கேட்டு பொன்னிறத்தாள் தன் கண்களை விழித்து பார்த்தாள் அந்த இருட்டிலும் நடப்பதெல்லாம் நிழலாக அவளுக்கு தெரிந்தது அவளை அறியாமளையே அவளின் மூச்சு நின்று விடுமோ என்று நினைத்தாள் பொன்னிறத்தாள்.
பூசாரி ஒரு சூரிக்கத்தியை கையில் வைத்துக்கொண்டு சூலாட்டின் நெஞ்சில் குத்தினான் சூலாடு மா மா என்று உயிர் போகும் வேளையில் அளறியது அந்த காட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது பூசாரி சூலாட்டின் நெஞ்சில் குத்தியை கத்தியை ரத்த வெள்ளத்தோடு கீழே இறங்கி சூலாட்டின் நெஞ்சை வகுந்து ரெண்டாகப் பிளந்தான்.
மரண விரைப்பில் சூலாடு தன் கால்களை உதைத்தது திருடர்கள் நால்வரும் திக்கிற்கு ஒருவராக நின்று அந்த அந்த சூலாட்டின் காலகளை உதைய விடாமல் பிடித்துக்கொண்டார்கள் கொடூரமான அந்த காட்சியை பார்த்த பொன்னிறத்தாள் வீல் என்று கத்தினாள்.
பூசாரி திருடர்களின் தலைவனைப் பார்த்து ஏய் அவள் மயக்கம் தெளுஞ்சி கண் முழிச்சிட்டா இந்த மை இருட்டுக்குள்ள அவள் ஏதாவது ஒரு புதருக்குள்ள போய் நுழைஞ்சிகிட்டா நாம அவளை தேடிக் கண்டுபிடிக்க முடியாது அதனால முதல்ல அவளின் புறங்கையையும் காலையும் ரெண்டு கயிற்று துண்டுகளால் கட்டிப் போடுங்க என்றான்.
பூசாரி சொல்கிறதை இந்த நேரத்தில் கேட்கவில்லை என்றால் பூஜை செய்கிறதில் ஏதாவது குறை வைத்துவிடுவான் பிறகு புதையல் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்த திருடர்களின் தலைவன் அந்த பெண்ணின் மேல் இரக்கப்பட்டு முதலில் அவள் சத்தம் போடாமல் இருக்க ஒரு துண்டுத்துணியை அவள் வாயில் திணித்து விட்டு தன் சேக்காளி ஒருவனின் தோளில் கிடந்த துண்டு ஒன்றை எடுத்து அப்பெண்ணின் கைகளையும் முன்பக்கமாகவே (பூசாரி சொன்னதுபோல் அவள் கைகளை பின்னுக்கு இழுத்து கட்டாமல்)கட்டினான்.
சூலாட்டின் நெஞ்சைக் கீறிய பூசாரிக் சூலாட்டின் நெஞ்சில் இருந்த ஈரக்கொலையை தாமரைகாய்(நூரையீரல் இதையம்)போன்ற பகுதிகளை தனியே அறுத்து எடுத்து பரணியில் போட்டான் சூலாட்டின் கர்ப்பபையில் முக்கால்வாசி விளைந்த நிலையில் இருந்த ஆட்டுக்குட்டியை உயிரோடு பரணியில் எடுத்துப்போட்டு ஏதேதோ புரியாத பாஷைகளை உச்சரித்தான்.
பூசாரியின் கையாள் உக்கிரமாக உடுக்கையையும் அடித்தான் ஆனால் புதையல் பூமியை விட்டு வெளியே வரவில்லை பூசாரி திருடர்களின் தலைவனைப் பார்த்துநான்தான் முதலிலேயே சொன்னேனே நிறைமாத சூலியை கண்ணால் பார்த்த பூதங்கள் இந்த சூலாட்டுப் பொலிக்கெல்லாம் மனம் இரங்காது என்று இனி அவளை பொலி கொடுத்தால் தான் புதையல் கிளம்பும் என்று கறாராகச் சொன்னான்.
மற்ற திருடர்கள் வந்ததே வந்து விட்டோம் பரணும் கட்டியச்சி குறித்த நேரம் போவதற்குள் இவளை புதையல் காக்கும் பூதத்திற்கு பலி கொடுத்து புதையலை எடுத்துகிட்டு ஒடிடுவோம் என்று ஒருசேர குரலில் ஒருமித்துச் சொன்னார்கள்.
இனியும் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்ற திருடர்களின் தலைவன் அப்ப சரி உங்கள் இஸ்டம் போல் செய்யுங்கள் என்று சொல்லி விட்டான்.
பூசாரி மற்ற திருடர்களைப் பார்த்து முதலில் அவள் உடுத்தியிருக்கும் சேலையை அவிழ்த்துவிடுங்கள் சட்டையையும் கழற்றி விடுங்கள் வாயில் இருக்கும் துணி அப்படியே இருக்கட்டும் இல்லை என்றால் காப்பாடு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிவிடுவாள் சட்டையை பாவாடையை கழற்றி அவளின் கை கால் கட்டுகள் இடைஞ்சலாக இருந்தால் அக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவள் சேலை சட்டைகளை அப்புறப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டான் முரடர்களான திருடர்கள் பூசாரி சொன்னபடியே நிறைமாத சூலிப் பெண்ணான பொன்னிறத்தாளை முழு நிர்வாணமாக்கினார்கள் நிர்வாணமான பொன்னிறத்தில் இருந்ததால் அந்த மை இருட்டில் அவளின் முழு மேனியும் தகதகவென்று ஜொலிப்பதை போலிருந்தது.
முழு நிர்வாணமான அவளைப் பார்த்ததும் பூசாரியின் ஆழ் மனதில் கனன்று கொண்டிருந்த காமகினி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அவளை தூக்கி முன்பு சூலாட்டை பரணியில் கிடத்தியது போல் இவளை பரணில் கிடத்தி அவளின் கை கால் கட்டுகளை அவிழ்த்து ரெண்டு காலை ரெண்டு பேரும் ரெண்டுகையை ரெண்டு பேருமாக திசைக்கு ஒருத்தராக நின்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டான் பூசாரி.
தடியர்களான திருடர்களும் பூசாரி சொன்னபடியே செய்தார்கள் பூசாரியின் கையாள் உடுக்கையை கையில் எடுத்து அடிக்க தொடங்கினார் நடக்க இருக்கும் விபரீதத்தை அறிந்த பொன்னிறத்தாள் தன்னால் இயன்ற மட்டும் கை கால்களை உதறமுயன்றாள் ம் முடியவில்லை முரடர்கள் அவள் கை கால்களை உதறவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.
பூசாரி கையில் சூரிக்கத்தியுடன் பரண்மேல் ஏறினான் நிர்வாணமான பொன்னிறத்தில் ஜொலிப்புடன் பரண்மேல் படுத்து கிடக்கும் பொன்னிறத்தாளின் அழகை காம இச்சையுடன் பார்த்து ரசித்தபடியே அவளின் உடம்பின் உச்சி முதல் முதல் உள்ளங்கால் வரை ஏதோ மந்திரத்திஅ உச்சரித்தபடியே தன் ரெண்டு கையாலும் தடவினான் மூன்று பிறை பக்கத்தில் கிடந்த சூரிக்கத்தியை தன் வலது கையில் எடுத்துகொண்டு நிறைமாத சூலிப்பெண்ணான பொன்னிறத்தாளின் நெஞ்சில் குத்த ஒங்கினான்.
அப்போது எதிர்பாராத விதமாக பரண்மேல் உறுமியபடி ஒரு புலிக்குட்டி பூசாரியின் முதுகில் பாய்ந்தது செத்தாண்டா என்று சொல்லியபடியே நிலைகுழைந்து பரணில் இருந்த தரையில் உருண்டு விழுந்தான் புலிக்குட்டி இப்போது அவன் நெஞ்சில் பாய்ந்து ஏறியது சற்றுமுன் புதையல் ஆசையால் ஒரு சூலாட்டின் நெஞ்சை வகுந்த பூசாரியின் நெஞ்சை இப்போது இப்போது தன் பூரிய நகங்களால் பிளந்தது.
சூழ்நிலையின் விபரீதத்தை புரிந்துகொண்ட திருடர்கள் அனைவரும் தலை பிழைத்தால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து திசைக்கு ஒருவராக ஒடத் தொடங்கினார்கள் ஒடத்தொடங்கிய ஒவ்வொருவரையும் காட்டுபுலிகள் துரத்தி அவர்கள்மேல் பாய்ந்து கொன்றன.
சற்று நேரம் கழித்து இன்னும் தனக்கு உயிர் இருப்பதை நினைத்து ஆச்சரியபட்டு பொன்னிறத்தாள் தான் நிர்வாணமாக கிடப்பதை உணர்ந்து வெக்கபட்டாள் தன் தலைவிதியை நினைத்து நொந்து அழுதாள் பரணியில் இருந்து நிர்வாணமாக இறங்கிய பொன்னிறத்தாள் நம்மை பிடித்திருந்த் தடியர்களை காணோமே எங்கே?என்று நினைத்து இந்த இடத்தில் இனியும் இருந்தால் அந்த முரடர்கள் வந்து மீண்டும் நம்மை பிடித்து விடக்கூடும் என்று நினைத்து தன் வயிற்றை தாங்கி தன் கைகளால் பிடித்துக் கொண்டு நிர்வாணமாக அந்த் அத்தானக் காட்டிற்குள் அர்த்தராத்திரியில் உயிரக் கையில் பிடித்துகொண்டு ஒட்டமும் நடையுமாக கால் போன போக்கில் ஒடினான்.
விதிவிட்ட வழியில் ஒடியவள் தன்னையறியாமல் இருட்டில் ஒரு பாங்கிணற்றில் விழுந்துவிட்டாள் பிலி வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் காலால் அடிபட்ட கதையாக பூசாரியிடம் இருந்து அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த பொன்னிற்றத்தாள் பாங்கிணற்றில் விழுந்து தன் உயிரை விட்டு விட்டாள் அவளோடு சேர்ந்து அவள் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரும் போய்விட்டது.
மறுநாள் நெடுவ தன் தங்கையை தேடி அலைந்த அண்ணன்மார்கள் ஒருவனிடம் ஆடு மாடு மேய்கிற பிள்ளைகள் இன்னமாதிரி பாங்கிணற்றுக்குள் ஒரு பெண் விழுந்து செத்து கிடக்கிறாள் என்று தாக்கல் சொல்ல அவன் மற்ற சகோதர்களிடம் சொல்ல நிர்வாணமாக கிடந்த பொன்னிறத்தாளை பட்டுச்சேலை கொண்டு போர்த்தி கிணற்றில் இருந்து தூக்கி எடுத்துவந்து தங்களுக்குக் சொந்தமான காட்டில் தரையில் நல்லடக்கம் செய்தார்கள்.
அங்கேயே ஒரு கோயிலும் கட்டி அக்கோயிலுக்கு பொன்னிறத்தாள் கோயில் என்று பெயரும் சூட்டி அப்பெண்ணை காபந்துபண்ண முடியாமல் சாக விட்ட பாவம்தீர ஆண்டுதோறும் அவளைக் கும்பிட்டு தன் குடும்பம் செழிக்க அருள்தரும்படி பொன்னிறத்தாளை சாமியாக்கி வேண்டுகிறார்கள் என்று பொன்னிறத்தாள் என்ற குறுஞ்சாமியின் கதையை சொல்லி முடித்தார் பனையன்குறிஞ்சி என்ற ஊரைச் சேர்ந்த சொள்ளமுத்து என்ற தகவலாளர்!

No comments: