கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 26, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-14

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

12வது வயதில் பாடகச்சேரி வருகை தந்து, மாடுகளை மேய்க்கும் பணியைச் செய்தார் ராமலிங்க சுவாமிகள்.
 அந்த வயதில் வடலூர் வள்ளலாரிடம் ஞானோபதேசம் பெற்றார். தனது ஞானத்தால் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் தரிசனம் தருவது, தோன்றுவது, மறைவது போன்றவற்றை நிகழ்த்தியுள்ளார். உலோகத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர் இவர். தியானத்தில் உடல் துவாரங்கள் ஒன்பதையும் தனித்தனியாகப் பிரிக்கும் "நவ கண்ட யோகம்' பயின்றவர்.பைரவ உபாசகர்.
 வெகு தொலைவில் இருப்பார். இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் வேண்டினால், அடுத்த நொடியில் அதே நாய்களுடன் கண் முன்பே தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு வைத்து, இவர் அழைத்தவுடன் எங்கிருந்தோ பெரும் திரளாக நாய்கள் தோன்றி வந்து உண்டுவிட்டுப் போகும் அதிசயங்களும் நிகழ்ந்தது

No comments: