கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, August 21, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-1


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-1 
கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்

ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை.செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார்.தியானம் முடிந்தபின், அரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில்அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர்.முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும்,அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-2 அங்கம் சிதறிய தவம்

வள்ளலார் தருமச்சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-3 கேமராவில் சிக்காதஒளியுடல்

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு  புகைப்படக்காரரை சென்னையிலிருந்து  அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது,  அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-4 
கோடையிலும் வற்றாத தீஞ்சுவை நீரோடை

சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.வள்ளலார் கரம்பட்ட தும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-5 நீரில் எரிந்த விளக்கு

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-6
 பெய்யெனப் பெய்த மழை

கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.இந்தக் கதவு வழியே சென்று உள்ளே ஸித்தியடைந்தார்...ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-7 ஓடிய பேய்கள்

ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-8 
தீண்டி இறந்த பாம்பு

ஒரு நாள் அடிகளைக் காணவந்தவர்கள் செட்டியார் வீட்டு வாழைத்தோட்டத்துக்கு தற்செயலாய் வந்தனர்.  கூடவே அடிகளும் வந்தார்.  தோட்டத்தைப் பார்த்துவிட்டு வாழைமரங்களில் கண்ணாடி இலைகள் விட்டிருப்பதையும் பூவிடும் நேரம் வந்துவிட்டதாயும் ஒருவருக்கொருவர் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.  தோட்டம் நன்றாய்ப் பராமரிக்கப் பட்டிருந்ததைப் பற்றி அனைவரும் பேசிக்கொள்ள அடிகள் குறிப்பிட்ட ஒரு வாழைமரத்தடிக்கு வந்ததும் நின்றார்.  அங்கே இருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. அடிகளை அது தீண்டிவிடப் போகிறதெனப் பயந்த செட்டியார் அடிகளைத் தூரப் போகச் சொல்ல பாம்போ சத்தம் கேட்டதும் பயத்தில் அடிகளைத் தீண்டியது. செட்டியார் பதறிவிட்டார். அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்தார்.  அடிகளைப் பாம்பு தீண்டியதையும் தலையில் ரத்தம் வருவதையும் சொல்லி உடனே வைத்தியரையும் அழைக்கச் சொன்னார்.
 ஆனால் அடிகளோ அமைதியாகவே இருந்தார்.  அவர் செட்டியாரிடம் புன்முறுவலோடு வைத்தியரை அழைக்கவேண்டாம் எனவும், தன்னிடம் இருக்கும் திருநீற்றைவிடச் சிறந்த மருந்து வேறெதுவுமில்லை என்றும் கூறிவிட்டு இடுப்பிலிருந்து விபூதிப்பையில் இருந்த விபூதியை எடுத்துத் தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் தடவிக்கொண்டார்.  அதற்குள் ஓடி வந்த மற்றவர்கள் இன்னும் கோபம் அடங்காமல் படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை அடிக்கப் போனார்கள்.  அப்போது அடிகள் அவர்களைத் தடுத்து, அந்தப் பாம்பு தான் சாகவே தன்னைத் தீண்டியதாய்க் கூறி பாம்பை அடிக்கவேண்டாம் எனத் தடுத்தார்.  அனைவருக்கும் குழப்பம் மீதூற அந்தப் பாம்போ இறந்து போய் வாழைமரத்திலிருந்து கீழே விழுந்தது.  மீண்டும் அனைவரும் திகைக்க ராமலிங்க அடிகள் நான் சொன்னது சத்தியம் எனப் புரிந்ததா எனக் கேட்டார்.  தங்கள் அறியாமையை மன்னிக்கும்படி அனைவரும் வேண்ட,  காலம் வரும்போது அனைவருக்கும் ஞாநம் பிறக்கும் என்றும் அறியாமைக்காக வருந்தவேண்டாம் எனவும் பாம்பை எரிக்காமல் புதைக்குமாறும் சொல்லிச் சென்றார்.  அனைவரும் இவர் அந்த நஞ்சுண்டகண்டனின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-9 கஞ்சன் கற்ற பாடம்

கூடலூரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் முதுமொழிக்கு இணங்க ஈந்து இசைப்பட வாழாது கருமி என்ற பட்டத்தோடு அவர் வாழ்ந்து வந்தார்.அவர் வள்ளற்பெருமானைக் காண அவ்வப்போது வடலூர் வந்து செல்வதுண்டு.  ஒரு நாள் வள்ளற்பெருமானைக் காண வந்த போது, கூட்டத்தின் இடையே எழுந்து தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று நினைத்து ஐயா அவர்களைப் பார்த்து ’சுவாமி, தாங்கள் ஒரு முறை எனது இல்லத்திற்க்கு எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று அவர் பலமுறை கேட்டதுண்டு. அன்றைய தினம் வள்ளற்பெருமான் அவரை உற்றுப் பார்த்துவிட்டு “பல நாட்களாக நீங்களும் அழைக்கிறீர்கள், சரி, நாளை வருகிறேன்” என்றார்.  செல்வந்தருக்கோ உதறல் ஏற்பட்டது.  ஐயா இப்படிச் சொல்வார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஐயா அவர்கள் வந்தால் வீண்செலவு ஆகுமே என்ற அச்சம் வேறு ஏற்பட்டது.
அடுத்த நாள், வள்ளற்பெருமான் செல்வந்தருடைய வீட்டிற்க்கு சென்றார். அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்த அவர், அவரது மனைவியிடம், ’வடலூர் சாமி வருகிறார், அவர் வந்தால் என் கணவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்றுவிட்டார் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று மறைந்துகொண்டார். வள்ளற்பெருமான் வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அவரது மனைவி பெருமானிடம் தனது கணவர் சொன்னபடியே நடந்து கொண்டார். முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா! நம் பெருமான், இதை அறியாதவரா, என்ன?, நல்லது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
   வள்ளற்பெருமான் சென்றபின் கணவனும் மனைவியும் நிம்மதிப் பெருமூச்சுடன் கூடத்திற்க்கு வந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியினை கண்டனர்.  ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையில் அவர் காலடி பதித்த தடங்களில் எல்லாம் பொன் துகள்கள் பரவிக்கிடந்தன.
தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் எந்தனக்கேஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலாம்நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்தாங்கினேன் சத்தியமாகத்தான்.வள்ளற்பெருமான் பொன் வடிவம் தாங்கிய செய்தியினை இப்பாடலே மெய்பிக்கும்.  பொன் வடிவம் பெற்ற ஐயா அவர்களின் பொன்னடிகளில் பொன் துகள்கள் தானே பரவிக்கிடக்கும்! பொன் துகள்களை கண்ட செல்வந்தரின் மனைவி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து ஒரு பெரிய தாம்பாளத்தினை எடுத்து வந்து அந்த பொன் துகள்களை திரட்ட முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன.  கணவனும் மனைவியும் மெய்விதிர்க்க தங்களது தவறான செயலை நினைத்து வருந்தினர்.  ஒரு மகானிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டோ, அறிவிழந்துவிட்டோமே, அளவற்ற செல்வம் இருந்தும் என்ன பயன்? எஞ்ஞான்றும் அழியாத பொன்வடிவம் பெற்ற பேரருளாளர் என்பதை உணராமல் எப்படிப்பட்ட பாவச்செயலினை செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்தினர்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-10 தீயை அணைத்த ஆடை

புதுப்பேட்டை கிராமத்திலேயே ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டு எவராலும் அணைக்க முடியாதபடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அடிகள் தாம் இருந்த இடத்திலிருந்தே தம்முடைய மேலாடையை வீசி எரிய தீ அணைந்தது. பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-11 
திரையில் தெரிந்த தில்லை தரிசனம்

ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருமஞ்சனத்திருவிழாவிற்கும், திருவாதிரைத் திருவிழாவிற்கும் அன்பர்கள் வந்து நம் அடிகளாரை அழைத்துக் கொண்டு சிதம்பரத்திற்குச் செல்வது வழக்கம். ஓராண்டு அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியாமல் போனது. அடியார்களின் வருத்தத்தை உணர்ந்த அடிகள், தருமச்சாலையின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அத்திரையினுள் சென்று பார்க்கக் கூறினார். உள்ளே சென்ற அன்பர்கள், சிதம்பரத்தில் அம்பலவாணரின் திருவிழாக் காட்சி எப்படியிருக்குமோ அவ்வாறே அங்கு தோன்றவே, அடி பணிந்து வணங்கி, திரைப் புறத்திலிருக்கும் அடிகளின் திருவடிகளிலும் விழுந்து வணங்கி அருள்பெற்றுச் சென்றனர்

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-12
கள்வர்களிடமும் கருணை காட்டுதல்

ஒருநாள் மஞ்சகுப்பம் நீதிமன்ற அலுவலர் ஒருவரும் அடிகளாரும் வண்டியில் மஞ்சகுப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது வழியில் திருடர்கள் இருவர் வண்டியை மறித்து நிறுத்தினர். முதலில் இறங்கிய நீதிமன்ற அலுவலரைக் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழற்றித் தரும்படி அத்திருடர்கள் அதட்டினர். அதைக் கேட்ட அடிகளார் அவசரமோ என்று கேட்க, அக்கள்வர்கள் அடிகளாரை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள் உயர்த்திய கைகள் உயர்த்தியபடியே நின்றன. கண் பார்வையும் செயலிழந்தது. கள்வர்கள் இருவரும் தங்கள் செயலுக்கு வருந்தினர். அடிகள் அருளால் கைகளும், கண்களும் செயற்பட்டன. அக்கள்வர்கள் இருவரும் வண்டியைச் சுற்றி வணங்கி இனி இத்தொழிலை விட்டுவிட்டு உழைத்து உண்பதாக உறுதி கூறிச் சென்றனர்.இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருவொற்றியூரில் அடிகள் ஒரு சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு கள்வன் அவர் காதில் அணிந்திருந்த கடுக்கண் ஒன்றை கழற்றினான். உறங்குவது போலிருந்த அடிகளார் மற்றொரு கடுக்கணைக் கழற்றுவதற்கும் இடம் கொடுத்தார். கடுக்கண்களைத் திருடு கொடுத்த அடிகளார் அதற்குப் பின் காதணி அணிவதைத் தவிர்த்துவிட்டார்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-13 (ரசவாதம்)

இராமலிங்க அடிகள் தருமச்சாலையில் இருந்த காலத்தில் அன்பர்களின் வேண்டுகோளுக்கிரங்கி, செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்களை பொன்னாக மாற்றிக் காட்டி (ரசவாதம்) அவற்றைப் பின் எவருக்கும் கிட்டாதபடி குளங்களிலும் கேணிகளிலும் எறிந்துவிடுவார். அம்பாள்புரம் வேம்பையர் தருமச்சாலையில் பாடகராகவும் இருந்தார். அவர் நம்பெருமானின் ரசவாதத்தைப் பார்த்தவர். அவர் நம்பெருமானைப் போல ரசவாதம் செய்ய முயன்று அப்பொருட்களை எடுத்துச் சென்று அவ்வாறே செய்யத் தொடங்கினார். துருத்தியில் வைத்து ஊதும் பொழுது எழுந்த புகை அவரது கண்களைக் குருடாக்கியது. அவர் எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பயனில்லை. இறுதியில் அடிகளாரிடமே வந்து நடந்தவற்றைக் கூறி தம்மை மன்னித்தருள வேண்டினார். அடிகளார் எல்லாம் அறிந்தவராதலால் ஒரு புன்னகை புரிந்து தண்ணீரைக் கொண்டுவந்து அவருடைய கண்களைத் துடைக்க, சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் பார்வை மீண்டும் வந்தது

வள்ளலார் அற்புதங்கள்-14 ஆணவம் அடங்கியது

ஆணவத்தின் மற்றொரு வடிவம்தான் அகங்காரம். அத்தகைய அகந்தை கொண்ட ஒரு மனிதர். புதுச்சேரி தந்தி நிலைய மேலாளர். அவர் பல மொழிகளில் பயிற்சி உடையவர். ஒரு சமயம் அவர் அடிகளாரைக் காண வடலூர் வந்தார். அவர் வருவதற்கு முன்னரே நம் அடிகள் ஒருவர் புத்தி சொல்ல வருகிறார் என்றார். வந்தவர் பல மொழிகள் அறிந்தவர். அப்போது அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து அவர் முன் நிறுத்தி, எந்த மொழியில் எப்பொருளை வேண்டுமானாலும் இப்பிள்ளையைக் கேளுங்கள் என்று அடிகள் கூற, வந்தவருக்கு பேச நாவெழாமல் அரைமணி நேரம் தவித்தார். அவருடைய செருக்கு அடங்கியது. நம் பெருமானிடம் வணங்கி மனதுக்குள் மன்னிப்புக் கேட்க பின் பேச்சுவரப் பெற்றார்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-15 
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார்

அ)இராமலிங்க அடிகளால் ஆட்கொள்ளப் பெற்ற கூடலூர் தேவநாயகம்பிள்ளையின் புதல்வர் நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நேரத்தில் அவ்வன்பரின் பிரார்த்தனையை ஏற்று அன்றிரவு 11 மணியளவில் அடிகளார் கூடலூர் சென்று தேவநாயகம் பிள்ளைக்கும். அவரது புதல்வருக்கும் திருநீறு வழங்கி, குணமடைய அருளாசி வழங்கிவந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் வடலூர் தருமச்சாலையிலும் அன்பர்களுக்கு உபந்நியாசம் செய்திருக்கிறார்கள். சாலையில் இருந்த அன்பர்களுக்கு தேவநாயகம்பிள்ளை மூலம் தகவல் தெரியவே பெரிதும் வியப்படைந்துள்ளனர்.
ஆ)வள்ளல் பெருமான் ஒருமுறை திருவதிகைக்கு வழிபடச் சென்றபோது கூட்டம் அதிகமாகி நெரிச்சல் ஏற்பட்டது. அப்போது பெருமான் பல இடங்களில் தோன்றி காட்சியளித்தார்கள்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-16 பேராசையால் வந்த வினை

சென்னையில் பெருமான் இருந்த காலத்தில் ஏழை கிறிஸ்தவர் ஒருவர் பெருமானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்க இதை அறிந்த பெருமானார் தினமும் இரண்டு ரூபாயை வெள்ளியாக்கும் திறனை அவருக்கு கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு வறுமையைப் போக்கி வாழ்ந்து வந்தார்ஆனால், ஆசைமேலிட வெள்ளிக்குப் பதிலாக பொன்செய்யும் ஆற்றல் தெரிந்தால் ஆடம்பரமாய் வாழலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அவர் எண்ணத்தைப் பெருமானிடம் கூற பெருமான் அவர் கையில் உள்ள வெள்ளி பூண் கட்டிய தடியை வாங்கி பூணை மட்டும் தட்டி எடுத்து கையில் சில நிமிடங்கள் வைத்து தங்கமாக்கி அவர் மனதை குளிரச் செய்தார். அவ்வாறு ஆக்கிய பூணை தருமச் சாலைக் கிணற்றில் எறிந்து “போய் வாரும், எல்லாம் சித்தியாகும்” என்று அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பி சென்னை திரும்பிய கிறிஸ்தவர் முன்போலவே வெள்ளியைச் செய்யத் தொடங்கிய போது வெள்ளியாகவில்லை. உள்ளதும்போய் அன்றாடப் பிழைப்புக்கு வழி இல்லாது தனது பேராசையால் வந்த வினையை நினைத்து மனம் வருந்தினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு

அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-18 கண்ணீரால் கரைந்த ஊனம்

ஒருவர் சாது என்ற போர்வையில் கையில் தடியுடன் கோட்டு சட்டை அணிந்தவராய் திரிந்தார். அவரது வார்த்தையை எதிர்த்தோ மறுத்தோ பேச முடியாமல் அனைவரும் அவரின் முரட்டுத்தனத்துக்கு அஞ்சி, அவரை முரட்டு சாது என்று கூறினர். ஒரு சமயம் முரட்டு சாது தங்கியிருந்த ஊருக்குச் சென்ற பெருமானார், அன்பர் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது ஆடு ஒன்று ஒரு கால் இல்லாத குட்டியை ஈன்றது. அக்குட்டியால் பால் அருந்த இயலாது எழுவதும் விழுவதுமாக இருந்தது. இதைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த பெருமானிடம் அங்கு வந்த முரட்டு சாது “கண்ணீர் வடித்தால் ஆட்டுக் குட்டிக்கு கால் வந்துவிடுமா?” என்று கேட்க பெருமானாரோ “இறைவன் திருவருள் கிட்டுமாயின் ஏற்படலாம்” என்றார். “அதையும் பார்ப்போம்” என்று அமர்ந்திருந்தார் முரட்டு சாது. பெருமான் மனமுருகி இறைவன்மீது பத்து பாடல்கள் இயற்றிப் பாட ஆரம்பித்தார். பாடி முடிவதற்குள் ஆட்டுக்குட்டிக்குக் கால் வந்து எழுந்து சென்று பால் அருந்தியது. ஆணவம், அகங்காரம், அலட்சியம் அனைத்தையும், கோட்டு சட்டைகளுடன் கழற்றி எறிந்துவிட்டு முரட்டு சாது பெருமானின் காலில் விழுந்து வணங்கி உண்மை சாதுவாய் மாறினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-19 பசிப்பிணி மருத்துவர்

ஒருநாள் செஞ்சி மலைமீது வள்ளலாரும்அவரது சீடரான தேவநாயகம் பிள்ளையும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மலையுச்சி, எங்கும் பசுமையான இயற்கைக் காட்சி. உணர்வெழுச்சி பெற்ற வள்ளலார் திடீரென இறையுணர்வில் தோய்ந்தார். செஞ்சி மலையின் உச்சியில் சம்மணமிட்டு அமர்ந்து அப்படியே தியானத்தில் மூழ்கிவிட்டார்.மூழ்கியவர் மூழ்கியவர்தான். தன்னை மறந் தார். சுற்றுப்புறச் சூழ்நிலைகளை மறந்தார். தாம் செஞ்சி மலைக்கு வந்திருக்கிறோம் என்பதை மறந் தார். தன்னுடன் ஓர் அன்பர் வந்திருக்கிறார் என்பதையும்கூட மறந்துவிட்டார். அவரது ஆழ்ந்த தியானம் நீண்டநேரம் நீடித்தது. நீடித்துக் கொண்டே இருந்தது!

உடன் வந்த தேவநாயகம் பிள்ளைக்குப் பசியெடுத்தது. வள்ளலார் யோகி. அவர் பசி, தாகம் போன்ற உணர்வுகளையெல்லாம் வென்றவர். ஆனால் தேவநாயகம் பிள்ளை அப்படிப்பட்ட வர் அல்லவே? அவருக்குப் பசி உயிரே போய் விடும்போல் இருந்தது. இந்த மலையுச்சியில் சாப்பிடுவதற்கு என்ன கிடைக்கும்? மலைமேலிலிருந்து கீழிறங்கிப் போகும் வரை பசியை எப்படிப் பொறுத்துக் கொள்வது?பிள்ளை கடும்பசியால் தவித்துக் கொண்டிருக் கும்போது வள்ளலார் மெல்லக் கண் மலர்ந்தார். தன் அருகே அமர்ந்திருக்கும் பிள்ளையை ஒரு பார்வை பார்த்தார். அவர்தான் ஒரே பார்வையி லேயே அனைத்தையும் கிரகிப்பவர் ஆயிற்றே? தேவநாயகம் பிள்ளைக்கு கடும் பசி என்பதைப் பார்த்த கணமே புரிந்துகொண்டார்.வள்ளலார் தம் பசி பொறுப்பாரே தவிர அடுத்தவர் பசியைப் பொறுத்துக்கொள்ள மாட் டார். அவரின் தாய்மனம் பிள்ளையின் பசியை நீக்க எண்ணியது. காற்றில் கை நீட்டினார். அடுத்த கணம் அவர் வலக்கரத்தில் ஒரு பெரிய லட்டு வந்து விழுந்தது. அதைப் பிள்ளையிடம் கொடுத்தார்.பிள்ளை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு அதை உண்டார். உண்டு முடித்த மறுகணம்அவருக்கு விக்கல் எடுத்தது. “இந்தா தண்ணீர்’ என மறுபடியும் காற்றிலிலிருந்து ஒரு குவளை நீரெடுத்துத் தந்தார் வள்ளலார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-20 இதோ ஓர் மனிதர் போகிறார்

ஒரு மகான் வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு தெருவில் போவோர் வருவோர் பற்றிய தம் அபிப்ராயத்தை உரக்கத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரவர் மன விகாரத்திற்கு ஏற்ப தம் கருத்தைக் கணித்து அவர் சொல்லிலிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டை அங்கிருந்தவர்கள் எல்லாரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு நபர் போகும்போது, “”இதோ ஒரு நரி போகிறது!” என்றார் அவர். இன்னொரு நபர் போகும்போது உற்றுப் பார்த்துவிட்டு, “”ஒரு நாய் போகிறது!” என்றார்.இப்படிச் சொல்லிலிக்கொண்டே வந்த அவர் வள்ளலார் செல்வதைப் பார்த்ததும் எழுந்து நின்று, “”இதோ ஓர் உயர்ந்த மனிதர் போகிறார்!” என்று சொல்லிலி அவரைக் கைகூப்பித் தொழுதார். இதைக் கண்ட பொதுமக்கள் வள்ளலார்மேல் உயர்ந்த மதிப்பைக் கொண்டார்கள்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-21கல்லாக மாறிய நாகம்

குறிஞ்சிப்பாடியில் ஓர் அன்பரைக் கருநாகம் ஒன்று தீண்டிவிட்டது. கருநாகம் தீண்டிப் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு. அச்சமடைந்த அவர் வள்ளலார்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து “”ராமலிலிங்கத்தின் மேல் ஆணை!” என்று உரத்துக் குரல் கொடுத்தார். அவரைத் தீண்டிய அந்தக் கருநாகம் வாயைப் பிளந்தது பிளந்தவாறே இருக்க, செதுக்கி வைத்த சிலைபோல் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது. விஷக்கடி அந்த அன்பரை ஒன்றும் செய்யவில்லை.
சில நாட்கள் கழித்து இந்த சம்பவத்தை அறிந்த வள்ளலார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, அந்தப் பாம்பைப் பார்த்தார். பாவம் அந்தப் பாம்பு. அன்ன ஆகாரமில்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தது.  குறிப்பிட்ட அன்பரை அழைத்த வள்ளலார், ஆணையை விடுவித்து பாம்பை விடுதலை செய்யச் சொன்னார். அந்த அன்பரும், “”ராமலிலிங் கத்தின் மேல் ஆணை. இனி நீ முன்போலவே இருக்கலாம்!” என்றதும் பாம்பு மீண்டும் உணர்வு பெற்று வள்ளலாரின் பாதங்களை விழுந்து வணங்கி புதருக்குள் ஊர்ந்து சென்றது!

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-22 நாகம் விளையாடிய பாதம்

சென்னை வியாசர்பாடியில் ஓர் இரவு சொற்பொழிவு முடித்துவிட்டு வள்ளலார் தம் நண்பர்களோடு இருளில் நடந்து வந்துகொண்டிருந்தார். வழியில் திடீரென ஒரு கருநாகம் படமெடுத்து வள்ளலார் முன் வந்து நின்றது. மிகப் பெரிதாக இருந்த ஒரு ராஜநாகம் அது.பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே? நண்பர் படை நடுங்காமல் இருக்குமா? எல்லாரும் என்ன செய்வது என அறியாமல்  திகைத்து நின்றார்கள்.ஆனால் வள்ளலார் பதற்றமே இல்லாமல் அமைதி காத்தார். “என்ன வேண்டும்?’ என்று கேட்பதுபோல் அந்த நாகப்பாம்பைப் பரிவோடு பார்த்தார். அது ஊர்ந்துவந்து மிகுந்த உரிமையோடு வள்ளலாரின் காலைச் சுற்றிக் கொண்டது.வள்ளலார் சிவபெருமானின் அவதாரமே தானோ? பாம்பு தானே வந்து அவர் காலைச் சுற்றிக் கொள்கிறதே? பார்த்தவர்கள் திகைத்தார்கள்; பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். “”சரி சரி, போதும் போய்வா” என்றார் வள்ளலார். அந்தப் பாம்பு மெல்ல அவரை விட்டு இறங்கிப் புதருக்குள் சென்று மறைந்துவிட்டது.கூடலூரிள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டில் சுவாமிகள் தியானத்தில் இருந்தார். அன்பர்கள் புறத்தில் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் இவர்களைத் தாண்டி உள்ளே சென்றார். வந்தவர் யார் என்று அறிந்து கொள்ள அன்பர்கள் உள்ளே சென்றனர். அங்கே ஒருவரும் இல்லை. ஒரு லட்டுதான் இருந்தது. சுவாமிகளிடம் விசாரிக்க அவர், வந்தவர் ஒரு சித்தர் என்றும், அவர் இப்பொழுது காசியில் இருப்பார் என்றார். அவர் கொடுத்த லட்டுதான் இது என்றார். அதைக் கேட்ட அன்பர்கள் சித்தரின் ஆற்றலையும் அத்தகையைவர் தம் குருவை காண வந்ததால் தம் குருவின் பெருமையையும் எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-23 மரணத்தை அறிவித்த மகான்

சுந்தர சுவாமிகள் என்ற பெருமகனார் அவரைக் காணவந்தார்.வள்ளலாரின் அருள் பொங்கும் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார் அவர். வள்ளலாரைச் சுற்றிப் பெருகிய ஆன்மிக அலை, இரும்பை காந்தம் இழுப்பதுபோல் அவரை இழுத்தது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றபடி, ஆன்மிகப் பெரியாரான அவர் இன்னொரு ஆன்மிக வள்ளலான வள்ளலாரால் ஈர்க்கப்பட்டார்.வள்ளலாரால் பெரிதும் கவரப்பட்ட அவர் வள்ளலாருடனேயே சிறிதுகாலம் தங்கியிருந்தார்.அவருடன் ஏராளமான ஆன்மிக உரையாடல்களை நிகழ்த்தினார். கேள்விகள் கேட்டுப் பற்பல சந்தேகங்களிலிலிருந்து தெளிவு பெற்றார்.வள்ளலாரின் எதிரே நின்று பேசாமல், பக்கவாட்டில் நின்றே அவர் எப்போதும் உரையாடுவது வழக்கம். தொடர்ந்து அதைக் கவனித்துவந்த ஓர் அன்பர் வியப்புடன் அது ஏன் என்று அவரை விசாரித்தார். “”தம் எதிரே நிற்பவரின் ஆன்மிக ஆற்றலை அப்படியே இழுத்துக்கொள்ளும் பேராற்றல் உடையவர் வள்ளலார் என்பதால்தான் நான் பக்கவாட்டில் நின்று பேசுகிறேன்” என்று பயபக்தியுடன் சொன்னார் சுந்தர சுவாமிகள். இந்த பதிலைக் கேட்ட வள்ளலார் அன்பர் கள் திகைப்படைந்தார்கள். வள்ளலார்மேல் அவர்கள் ஏற்கெனவே கொண்டிருந்த மதிப்பு இந்த பதிலால் மேலும் பெருகியது.வள்ளலாரும் சுந்தர சுவாமிகளும் பேசும் ஆன்மிகப் பேச்சுகளை மற்றவர்களும் கேட்டுப் பயன்பெற்றார்கள். ஆன்மிக வளர்ச் சிப் படிநிலையில் அடுத்தடுத்து நிகழ்த்த வேண்டிய நுணுக்கமான பல சாதனைகளைப் பற்றி வள்ளலார் அவருக்கு அறிவுறுத் தினார். அற்புதமான அந்தக் கூட்டுறவு சிறிது காலம்தான் நீடித்தது. பின்னர் ஒருநாள் சுந்தர சுவாமிகள் வள்ளலாரைப் பிரிய மனமின்றிப் பிரிந்து விடைபெற்றுச் சென்றார். அப்போது வள்ளலாரின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது.வள்ளலார் கண்ணில் நீர் வரும் வகையில் தழுதழுத்து உருக என்ன காரணம் என்று சீடர்கள் வினவினார்கள். பெருமூச்செறிந்த வள்ளலார், “”இந்த அன்பர் இன்னும் ஆறே மாதங்களில் உலகைத் துறப்பார். அதை எண்ணித்தான் வருந்தினேன். இனி இந்த அற்புதமான மனிதரைப் பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கெல்லாம் கிட்டாது!” என்று குறிப்பிட்டார்.வள்ளலார் சொன்னபடியேதான் நடந்தது.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-24 மழை நனைக்காத மகான்

ஒரு நாள் கன மழையில் விரைந்து சென்றுகொண்டிருந்த வள்ளலார்மேல் ஒரு சொட்டுத் தண்ணீர்த் துளிகூட விழவில்லை! அவர் உடை ஈரமாகவே இல்லை! மழை அவரைச் சுற்றிப் பெய்ததே தவிர, அவரை ஒருசிறிதும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டது!இந்த அதிசயமான நிகழ்வைப் பார்த்த அன்பர் கள் அவர்மேல் மட்டற்ற மரியாதை கொள்ளலா னார்கள். இயற்கையே அவரைப் பாதுகாக்கிறது என்பதையும், அவர் விரும்பினால் இயற்கைச் சக்திகளையும்கூட தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
சிவலிங்கமாக மாறிய மண்
ஒருநாள் திருவொற்றியூர்க் கோவிலிலில் அவரை வழிமறித்தாள் அன்பான ஒரு மூதாட்டி, “”நீ மகான் என்பது எனக்குத் தெரியும். ஏதேனும் ஓர் அற்புதத்தை நீ நிகழ்த்திக் காட்டத்தான் வேண்டும்!” என்று வற்புறுத்தினாள் அவள்.அந்த மூதாட்டியின் பாசத்திற்குக் கட்டுப் பட்ட வள்ளலார் கோவிலிலிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி மூதாட்டியிடம் கொடுத்தார். “”சற்றுநேரம் கையை மூடி வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு கையைத் திறந்துபார்” என்று சொல்லி வள்ளலார் சென்றுவிட்டார்.

சற்றுநேரம் கழித்துத் தன் கையை ஆவலோடு திறந்து பார்த்தாள் அந்த மூதாட்டி. என்ன ஆச்சரியம். மணல் முழுவதும் சின்னச் சின்னச் சிவலிலிங்கங்களாக மாறியிருந்தது! ஓடிவந்து மூதாட்டியின் கையைப் பார்த்த எல்லாரும் “சிவ சிவ’ என வள்ளலாரை நினைத்து இருகரம் கூப்பித் தொழுதார்கள்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-25பெருநோய் தீர்த்த் பெருமான்

ஒரு குஷ்ட நோயாளி வள்ளலாரைப் பணிந்து தன் நோயை
குணப்படுத்தலாகாதா என்று கண்ணீர் விட்டுக் கரைந்தான். கருணையே வடிவான வள்ளலார் அவனது தீராத பெருநோயைத் தன் கையால் திருநீறு கொடுத்துத் தீர்த்து வைத்தார். வள்ளலார் கைத் திருநீறு குஷ்ட ரோகத்தை நீக்கும் மருந்தாகச் செயல்பட்ட விந்தையைப் பார்த்து மக்கள் ஆச்சரியப் பட்டார்கள்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-26 அருட்பாவும் மருட்பாவும்

அக்காலத்தில் இருந்த சில தமிழறிஞர்களுக்கு வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என்று அழைப்பது பிடிக்கவில்லை. “போலி’லி அருட்பா மறுப்பு’ என்ற தலைப்பில் அவர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிடலானார்கள்.
அப்போதுதான் ஆன்மிக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விந்தையான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் வள்ளலார்மேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என அழைப்பது தவறு என்பதே அவர் தரப்பு வழக்கு. வள்ளலார் நீதிமன்றத்திற்கே வருகை தரவேண்டிய சூழல் நேர்ந்தது. அவ்விதம் வள்ளலார் நீதிமன்றத் திற்கு வந்தபோது நடந்தது அந்த அதிசயம்….இலங்கைத் தமிழறிஞரான ஆறுமுக நாவலர் செய்துள்ள தமிழ்த் தொண்டுகள் பலப்பல.
அவர் சைவ நெறியைப் பரப்புவதில் முதன்மை வகித்த பெருந்தகையாளர். தமிழ் உரைநடைக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு கணிசமானது.

வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்றழைப்பது அவர் மனதை உறுத்தியது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பாடிய பாடல்கள் அருட்பாக்கள். சேக்கிழாரின் பெரிய புராணம் நாயன்மார்களின் உன்னத வரலாற்றை இனிய கவிதைகளால் எழுதிச் செல்கிறது. இறைவனை நேரில் கண்ட அடியவர்கள் அவர்கள். நாயன்மார்கள் நிகழ்த்திய அற்புதங்களும் சேக்கிழாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைவ சமயத்தைக் காப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். சைவ சமயத்தைத் தழைக்கச் செய்த அடியவர்களான நாயன்மார்களின் பாடல்களை அழைக்கும் அதே அருட்பா என்ற சொல்லால் வள்ளலார் பாடல்களையும் அழைப்பது சரியா? வள்ளலார் பாடல்கள் அருட்பா அல்ல; மருட்பாக்களே என்று ஆறுமுக நாவலர் கருதினார். வள்ளலார் மேல் அவருக்கு மதிப்பு உண்டு என்பது மெய்தான். என்றாலும் அவரது பாடல்களை அருட்பாக்கள் என்று கூறுவது மிகையான கூற்று என்பதே நாவலர் கருத்து.

நாவலர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது, மஞ்சக்குப்பம் டிஸ்ட்ரிக்ட் முன்சீப் நீதிமன்றத்தில்”அருட்பா என்ற வார்த்தைப் பிரயோகத்தை வள்ளலார் பாடல்களுக்கு அனுமதிக்கலாகாது’ என்று வழக்குத் தொடுத்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவ்வழக்கு. வள்ளலார்அன்பர்கள் திகைத்தார்கள். வள்ளலாருக்கு எதிராக நூல் எழுதியவர்கள் மகிழ்ச்சிஅடைந்தார்கள்.

அப்போது மஞ்சக்குப்பத்தில் டிஸ்ட்ரிக்ட் முன்சீப்பாகப் பணியாற்றியவர் முத்துசாமி ஐயர் என்பவர். நேர்மைக்கும் நாணயத்திற்கும் புகழ்பெற்றவர். மக்களிடம் பெரும் செல்வாக்கு உடையவர். அவர் எந்த வழக்கைக் குறித்து எப்படித் தீர்ப்புச் சொன்னாலும் அது சரியாக இருக்கும் என்று மக்கள் கருதினார்கள்.

ஆறுமுக நாவலர்- வள்ளலார் தொடர்பான வழக்கு நடைபெற்றது. முத்துசாமி ஐயர் இருதரப்பு வாதங்களையும் மிக கவனமாகக் கேட்டார். அப்படிக் கேட்டது மட்டுமல்ல;

அப்போது வேறு ஒரு விஷயத்தையும் அவர் மிகக் கூர்மையாகக் கவனித்தார்.

அவர் கவனித்த விஷயம் அவரை சிந்தனையில் ஆழ்த்தியது.

வள்ளலார் நீதிமன்றங்களுக்கு வந்தவர் அல்ல. தம் பாடல்கள் தொகுக்கப்படுவதையே தொடக்கத்தில் அவர் அனுமதிக்கவில்லை.

அன்பர்கள் வற்புறுத்தியதால்தான் தம் பாடல்களைத் தொகுக்க அவர் அனுமதி அளித்தார். அருட்பா என்ற பெயரிட்டு அவற்றைத் தொகுத்ததால் அல்லவா அவர் இப்போது நீதிமன்றம் வரை வரவேண்டிய நிலைமை நேர்ந்துள்ளது?

இறைச்சிந்தனை அன்றி வேறு எந்தச் சிந்தனையும் இல்லாத வள்ளலார் ஒளிவீசும் முகத்துடன் நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்தார். அங்கே ஏற்கெனவே ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.

வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும் அங்கு இன்னதென்றறியாத ஒரு தெய்வ சான்னித்தியம் உணரப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்த அனைத்து மக்களும் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வண்ணம் எழுந்து நின்றார்கள். நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த முத்துசாமி ஐயரும் தன்னை மறந்து எழுந்து நின்றார்.

அதுமட்டுமல்ல; யாருடைய பாடல்கள் அருட்பாக்கள் அல்ல என்று வழக்குத் தொடுத்திருந்தாரோ, அந்த ஆறுமுக நாவலரும் வள்ளலார் வந்தபோது தம்மையறியாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியை வேறு யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த முத்துசாமி ஐயர் இதை கவனிக்கத் தவறவில்லை.

வழக்கு விசாரணை நடைபெற்றபோது, “வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்தபோது அனைவரும் எழுந்து நின்றது இருக்கட்டும்; ஏன் வழக்குத் தொடுத்த நாவலரே எழுந்து நின்றார்?’ என்று நாவலரிடமே கேட்டார் முத்துசாமி ஐயர்.

வள்ளலாரின் தவ சக்தியைத் தான் சந்தேகப்படவில்லை என்றும்; அவர் தூய துறவிதான் என்றும்; அவரது பாடல்களை அருட்பா என்று அழைப்பது குறித்து மட்டுமே தமக்கு மறுப்பு என்றும் நாவலர் தெரிவித்தார். அதையே சான்றாதாரமாகக் கொண்ட முத்துசாமி ஐயர், வழக்குத் தொடுத்தவராலும் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள வள்ளலார் எழுதியவற்றை அருட்பா என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளித்தார். வள்ளலார் அன்பர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்


3 comments:

Raj trichy said...

வள்ளலார் உடல் சிதறி இருந்தது போல் செய்த யோகா/தவம், ஷ்ரிடி சாய் பாபா அவர்களும் செய்து உள்ளததாக சாய் சரித்திரத்தில் வருகிறது.. எப்படி பட்ட மகன்கள் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளனர். அருமையான பக்கம் உங்களுடையது. நன்றிகள்

rajendran said...

வள்ளலார்ர் பற்றி அறிய வெகு நாட்களாக முயற்சித்தேன். இன்று அந்த தாகம் தணிந்த்து. நன்றி ஐயா!

Anonymous said...

nice nice i love it you are reallly exhaustic