கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-21

முத்துவீர பகடை

வேப்பிலாங்குளம்ங்கிற ஒர் ஊர்ல முத்துவீர பகடைன்னு ஒருத்தன் இருந்தான் அவன் பொண்டாட்டி பேரு பூவுடையா அவளுக்கு அழகான ஒரு ஆம்பளப் புள்ளை பேரு சின்னத்தம்பி.
வளர்ந்து வாலிபமானதும் சின்னத்தம்பி வாட்ட சாட்டமா உருண்டு திரண்டுட்டான் வெளியூர் அண்ணாவிமார்களிடம் போய் கம்பு சுத்தறது வஸ்தாரி பிடிக்கிறதன்னு சகல வீர வெளையாட்டுக்களையும் கத்துக்கிட்டான்.

நாங்குனேரியில மாணிக்க வாசபிள்ளைன்னு ஒரு பண்ணையார் வளர்த்து வந்த குதிரைக்கு மதம் பிடிச்சிட்டு பிள்ளைவாளைப் பார்த்தாலே ரொம்ப மிரண்டது அது விறக்வும் அவருக்கு மனசில்லை அதனால இந்த குதிரையை யார் அடக்கி வசத்துக் கொண்டு வாராங்களோ அவங்களுக்குப் பத்துப் பொன்காசு பரிசாகக் கொடுக்கிறேன்னு அறிவிச்சாரு.
அந்தச் சேதி சுத்துப்பட்டி எல்லாம் பரவிச்சு சின்னத்தம்பியோட சேக்காளிமாருக சின்னத்தம்பி நீ நினைச்சா நாங்குனேரி பிள்ளைவாளோட குதிரையை அடக்கிடலாம்னு சொல்லி அவனை உசுப்பேதினாங்க இவனும் போனான்.

நேர குதிர லாயத்துக்குப் போய் குதிரையையே கொஞ்ச நேரம் கண்ணால உத்துப் பார்த்தான்.குதிரையும் சின்னத்தம்பியைக் கண் எடுக்காம பார்த்துச்சு இப்படிக் கொஞ்ச நேரம் கண்ணால பார்த்து வசியம் செஞ்சி குதிரையை தன் வசத்துக்குக் கொண்டு வந்தான் அப்புறம் குதிரய அவுத்துட்டு வந்து குதிர மேல ஏறி சவாரி செஞ்சபடியே அந்த ஊர மூணு வளையம் சுத்தி வந்தான்.
அடங்காத குதிரயை அடக்கிய சின்னத்தம்பியோட வீரத்தப் பாராட்டி நாங்கோரி நாட்டாமை பத்துப் பொன்காசுகள் சின்னத்தம்பியிடம் கொடுத்து அவனைப் பாராட்டினார் சின்னத்தம்பியோட புகழ் சுத்து வட்டாரமெல்லாம் பரவிட்டு
சேதி மகாராஜா காது வரைக்கும் போயிட்டு ஒடனே அவரு சின்னத்தம்பியக் கூப்பிட்டு வள்ளியூர் காட்டுல அழிமானம் செய்யுற காட்டு வெலங்குக கொட்டத்தை ஒன்னாலதான் அடக்க முடியும். அப்படி அடக்குனா ஒனக்குச் சனமானம் காத்துக்கிட்டு இருக்குன்னுன்னார்.

சரின்னு சொல்லி புறப்பட்ட சின்னத்தம்பி அவனோட சேக்காளிமாருகளோட வள்ளியூர் காட்டுக்கு வெட்டருவா வேல் வீச்சுக்கம்போட போயி காட்டு மிருகங்கள வேட்டையாடினான் அப்புறம் அதுக ஊருக்குள்ளேயே எறங்கல வள்ளியூர்க்காரங்க நிம்மதியா வாழ்ந்தாங்க சந்தோஷப்பட்டாங்க சின்னத்தம்பியைப் பாராட்டினாங்க.
சின்னத்தம்பி காட்டு வெலங்குகளை வேட்டையாட வெள்ளியூர் காட்டுல தங்கி இருந்தபோது சோனாங்ச்சிங்கிற கன்னிப் பெண் அழகுல மயங்கிட்டான் சோனாச்சியும் சின்னத்தம்பியோட ஆணழகப் பார்த்து மயங்கிட்டா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரமிச்சாங்க.

சின்னத்தம்பி காட்டு விலங்குகல வேட்டையாடியதால மகாராஜா கூப்பிட்டு சின்னத்தம்பிக்கும் அவனோட சேக்காளிகளுக்கும் சன்மானங்க கொடுத்து கெளரவிச்சாரு அத்தோட அரண்மனைத் தளபதியா நெயமிச்சாரு.
தனது வீரதீரத்தால அரண்மனைத் தளபதியாகிவிட்டானே சின்னத்தம்பின்னு மேப்பட்டறையைச் சேர்ந்த சிலர் பொறாமைப் பட்டாங்க சின்னத்தம்பிய எப்படியாவது கொன்னுடனும்னு காத்துக்கிடக்க ஆரமிச்சாங்க அதனால அவன் எங்க போறான் எங்க வரான்னு கண் காணிச்சாங்க.
ஒரு நா சின்னத்தம்பி முக்கூடல் பக்கத்துல இருக்க பாப்பாகுடிக்கு ஒரு ஜோலியாப் புறப்பட்டு போனான் அவன் மட்டும் தன்னந்தனியா காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தான் சின்னத்தம்பிக்கு துணையா ஒரு காவ நாயி கூட போச்சு அவனைக் கொல்றத்துக்கு நாலு பேர் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தாங்க.

முக்கூடல் பக்கத்துல இருக்குற பேய் பாறை ஒடையை ஒட்டிய ஒரு புஞ்சையில மாடன்னு ஒரு சம்சாரி உழுதுகிட்டு இருந்தான் அவன் கலப்பை கொழுவுல ஒரு கிடாரம் தட்டுப்பட்டுச்சு அப்ப மாடன்கூட அவனோட மச்சினனுமிருந்தான்.
புதையல் பானையைப் பார்த்த மாடனோட மச்சினன் மச்சான் புதயலைத் தொடாதே ரத்தப் பலி கொடுத்த பெறகுதான் புதயலை எடுக்கனும்னான் மாடனும் சரின்னு சொல்லிட்டு உழுறத நிறுத்திட்டான்.
உழுறத எடையில நிறுதிட்டு வாரவங்களப் பார்த்த சின்னத் தம்பியோட எதிரிங்க என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க மாடனும் புதையல் விசையத்தை சொன்னான் உடனே வழிப்போக்கா வந்தவங்க தூரத்தில போகிற சின்னத்தமிபியைக் காமிச்சு அவனை மாதிரி வாட்டசாட்டமான கன்னி கழியாத எளவட்டத்துப் பொலி கொடுத்தாத்தான் புதையலை எடுக்க முடியுமுன்னு சொன்னாங்க.

சரின்னு போன மாடனும் அவன் மச்சினனும் சின்னத்தம்பிக்கிட்ட போய் ஜயாவுக்கு எந்த ஊரு இப்ப எங்க போறீங்கன்னு பக்குவமா விசாரிக்கிற மாதிரி பேச்சிக் கொடுத்தாங்க அப்படியே பதனி குடிச்சிட்டு போங்களேன்னுக் கூப்பிட்டாங்க.
அவனும் வந்தான் பதனியில மயக்க மருந்த கலந்து ஊத்திக் கொடுத்தான் மாடன் சின்னத் தம்பி ஒலப்பட்டையில வாய் வச்சு பதனியக் குடிக்க போறபோது அவங்கிட்ட இருந்த காவல் நாய் சின்னத்தம்பியை பொறாண்டுச்சு ஆனா நாய் எதேச்சயா பொறாண்டுதுன்னு நினச்ச சின்னத்தம்பி பசியும் தாகமும் ரொம்ப இருந்ததால பட்டையில இருந்த பதனி முழுவதையும் மடக் மடக்குன்னு குடிச்சிட்டான் உடனே மயக்கமாகி விழுந்துட்டான் அப்புறம் சின்னதம்பியை குண்டுகட்டாக கட்டித் தூக்கிட்டுப் போய் ஒரு புதர் மறைவுல போட்டுட்டாங்க.

நடுச்சாம வேளவரக் காத்திருந்து சின்னதம்பியை தூக்கிட்டுப்போய் பொதையல் இருக்கிற இடத்துல போட்டு ஒரே வெட்டா வெட்டி அவனப் புதையலுக்கு நரபலியா கொடுத்துட்டாங்க. நரபலி கொடுத்த பெறகு கலப்பக்கொழு தட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்தா அது ஒரு பெரிய செப்பு பானை இருந்துச்சு அந்தப் பானையில தங்கமும் இல்ல வைரமும் இல்ல சின்னத் தம்பியை நரபலி கொடுக்கச் சொன்னவங்க புதையல் பானையில் ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சதும் சிட்டாப் பறந்துட்டாங்க.
மாடனும் அவன் மச்சினனும் ராவோட ராவா அந்த இடத்துலயே சின்னத்தம்பிய புதையல் தேடி வெட்டிய குழிக்குள்ளையே போட்டு மூடிட்டாங்க நடந்த நடப்ப பார்த்த காவல் நாயி சின்னத்தம்பியின் காதலி சோனாச்சிகிட்ட சேலையை பிடிச்சி இழுத்துகிட்டு வந்து சின்ன தம்பி பொலிக் கொடுத்த இடத்தைக் காட்டுச்சி தன் காதலன் செத்துட்டான்னதும் சோனாச்சியும் பக்கத்துல ஒரு மரத்துல தூக்குப்போட்டு செத்துட்டா.

சின்னத்தம்பி கொன்னவங்களக் கண்டுபிடிச்சி மகாராஜா தண்டிச்சாரு சின்னத்தம்பிய அடக்கம் செஞ்ச இடத்துல ஒரு கோயிலையும் கட்டி வச்சாருன்னு சின்னத் தம்பியோட சோகக் கதையைச் சொன்னாரு பனையன்குறிச்சியச் சேர்ந்த பெரிய கருப்பன்

No comments: