கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 12

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ வேணாம்னு இழுத்துக்கிட்டே வந்தான். அவன் மனசுல என்னமோ இருக்குனு ராசா கண்டுக்கிட்டாரு. உடனே தன் மந்திரிய கூப்புட்டு, இந்த மாதிரி இந்த மாதிரி , நீங்கதான் பேசி என்னன்னு கேக்கனும்னு கேட்டுக்கிட்டாரு. மந்திரி நல்ல வயசாளி. அது மட்டுமில்லாம இளவரசன சிறு பிள்ளைல தூக்கி வளர்த்தவரு. சரின்னுட்டு போயி இளவரசன்ட்ட பேசினாரு. முதல்ல இல்ல அது இதுன்னவன் , அப்புறம் சொன்னான் "ஐயா எனக்கு நாலு தனங்கள்(மார்பு) உள்ள பொண்ணு வேணும, முன்னாடி ரெண்டு பின்னாடி ரெண்டு". நேரா வந்து ராசா கிட்ட சொன்னாரு மந்திரி. இதென்னடா கோட்டிக்காரத்தனமா இருக்கு, என் வயசுல ரெண்டுக்கு மேல பாத்ததே இல்லயேனுட்டு, "என்னால தேட முடியாது, அவனையே தேடிக்க சொல்லுங்க"னு சொல்லிட்டாரு.



சரீன்னு இளவரசன் கிளம்பி ஊர் ஊரா சுத்தறான். சரீ... ஏன் அவன் நாலு கேட்டான்? அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஒரு நா கனவுல ஒரு குளத்தோரமா கொலுசு சத்தம் கேட்டுச்சு, ஒரு பொண்ணு குளிச்சிட்டு இருந்தா. அவ முதுகுல ரெண்டு தனம் இருந்துச்சு. படக்குன்னு முழிச்சுக்கிட்டான். இவனே நினைச்சிருக்கான் பல தடவ இப்படி நாலு இருந்த சில சமயங்கள்ளே உதவுமேனு. அப்போ தீர்மானிச்சான்.



குளக்கரை, ஆத்தங்கரைனு தேடினான். ரெண்டு உள்ளதை கண்டு பிடிக்கறதே அரிதா இருந்துச்சு. அரை, முக்கால்னு இருக்கு. ஒரு நா களைப்புல மரத்து மேலேயே தூங்கிட்டான். அப்போ கனவுல வந்தா மாதிரியே கொலுசு சத்தம் கேட்டுச்சு. முழிச்சுப் பார்த்தான். அப்போ குளக்கரைல ஒரு பொண்ணு குளிச்சிட்டு இருந்தா, முதுகுல ரெண்டு தனம். மொதல்ல கனவோன்னு நினைச்சான். அப்பறம் நினவுனு உறுதி செஞ்சுகிட்டு. கீழே எறங்கி ஒளிஞ்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு குளிச்சுட்டு துணியை எல்லாம் சுத்திட்டு வந்தா. பின்னாடியே போன இளவரசன் வீட்டை கண்டுகிட்டான்.



நேரா ராசா கிட்ட வந்து சொன்னான். பொண்ணு எடம் கொஞ்சன் ஏழை தான் ஆனாலும் பய புடிச்சு இருக்கானேனு சரீனுட்டார். கல்யாணம் ஆச்சு. மொத ராத்திரில ஆர்வத்த அடக்க முடியாம இளவரசன், பொண்ணு வந்த உடனே கட்டி புடிச்சு, பின்னாடி தடவினான். ஒண்ணுத்தயும் காணோம். 'எங்கடி?' ன்னான். 'என்னாதுங்க?'ங்கறா இவ. இவன் சொன்னான் அதுக்கு அவ' ஆட்டுக்கு பின்னாடி வாலு மனுசனுக்கு முன்னாடி பாலு இல்லயா, அதுக் கூடத் தெரியாதா?' ன்னா. 'நா பாத்தேன்ங்கிறான் இவன். அவ கிட்ட முழுசா எல்லாத்தயும் சொன்னான். அதுக்கு அவ ' ஓ அதுவா, நா குளிக்கும் போது நல்லா வயரெல்லாம் தேய்ச்சு குளிப்பேன், அது இடஞ்சலா இருக்குமேனு தூக்கி பின்னாடி போட்டுடுவேன், அத தான் நீங்க பாத்தீங்க' னா.

----

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் கி.ராஜநாரயணன் மற்றும் கழனியூரான் தொகுத்து இருக்கும் 'மறைவாய் சொன்ன கதைகள்'ல் மேலே உள்ள கதைகள் போல அட்டகாசமான 101 கதைகள் இருக்கின்றது. கதையை என் ஞாபகத்திலிருந்த வரையில் எழுதியிருக்கிறேன்

LINK:http://modumutti.blogspot.in/2010/05/blog-post_28.html

No comments: