கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 6

 இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க.

யப்பா, இப்பிடியா உள்ள ஒரு பெண்ண நீதாந் தேடிக் கண்டுபிடிக்கணும். எங்களாலே ஆகாதுன்னுட்டாங்க.

சரீன்னு சொல்லி இவன் புறப்பட்டாம். ஊரு ஒலகமெல்லாம் சுத்தினாம். ஆத்துல குளத்துல வாய்க்கால்லன்னுட்டு வரீசைய பாத்துகிட்டே வந்தாம். விதவிதமானதுகளத் தாம் பாத்தானே தவிர நாலு உள்ளதுகளுமில்ல. மூணு உள்ளதுகளுமில்ல. சொல்லப் போனா ஒண்ணரை, ஒண்ணே முக்காலு இப்பிடித்தான் இருந்துச்சாம்.

பயலுக்கு சே’ன்னு ஆயிட்டது!

பின்னே ஏம் இப்பிடிச் சொன்னாம்?
அதுக்கு ஒரு காரணம் இருந்தது.

ஒரு நா ராத்திரி அவம் தூக்கத்துல ஒரு சொப்பனங்கண்டாம். அந்த சொப்பனம் விடியப் போற நேரத்துல வந்தது.

விடியப் போற நேரத்துல வார சொப்பனம் பலிக்கும்ங்கிற நம்பிக்கெ.
அந்த சொப்பனத்துல ஒரு பொண்ணு குளிச்சிக்கிட்டிருக்கா; உடம்பெத் தேச்சிக் குளிக்கிறப்போ தேக்கிற வளைய சத்தங்கூடக் கேட்டுது. கவனிச்சிப் பாத்தப்போ அந்தப் பொண்ணுக்கு முதுகுல ரெண்ணு தனங்கள் இருந்தது.
ரொம்ப ஆச்சர்யம் இவனுக்கு.

இவனே நெனச்சது உண்டு; இப்பிடி இருந்தா சில சமயத்துல வசதியா இருக்குமேன்னுட்டு.

முழிப்புத் தட்டியதும் தான் நினைச்சாம். நிச்சயம் எங்கோ அப்பிடி ஒரு பொண்ணு இருக்கா. கட்டாயம் தேடிக் கண்டுபிடிச்சிக் கட்டிக்கிடணும். அதுலயிருந்து அவன் அவளைத் தேட ஆரம்பிச்சாம்.

நாலு தனங்கள் உள்ள பொண்ணுகளெத் தேடித் தேடி எங்கயும் காங்காம அலுத்து, ஒருநா ஒரு குளத்தங்கரை மரத்து எணல்லெ அசந்து படுத்தவன் நல்லாத் தூங்கிட்டாம்.

அவம் முந்தி ஒருநா சொப்பனத்துல கண்டானே, அப்பக் கேட்டுதெ, அதேபோல வளைய சத்தம் கேட்டுது.
கொஞ்சங்கொஞ்சமா பயலுக்கு முளிப்பு வந்தது.
அரண்மனையில, பஞ்சுமெத்தயில படுத்துக்கிட்டிருக்கிறதா நெனச்சிக்கிட்டிருந்தவனுக்கு, மரத்துக் கடியில உதுந்து குமிஞ்சிக் கிடக்கிற சருகு இலைக மேல வேட்டிய விரிச்சிப் படுத்துக் கிடக்குது தெரிஞ்சது. பெறவுதாம் குளத்துக்கரைங்கிறது ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, வளையச்சத்தம் இன்னும் கேட்டுக்கிட்டுத் தானிருந்தது.

பைய்ய எந்திரிச்சி பாத்தாம். கண்ணெ கசக்கிவிட்டுப் பாத்தாம். சொப்பனங்காணலை, நெசந்தாம்! அந்த தாமரைக் குளத்து படிக்கட்டுல ஒரு பொண்ணு அம்மணமா குளிச்சிக்கிட்டிருந்தா. யாருமே பாக்கலெங்கிற தைரியத்துல சாவாசமா உக்காந்து குளிச்சிட்டிருந்தா. இவனுக்கு அவளோட முதுகுப்பக்கந்தாம் தெரியிது. முதுகுல ரெண்டு தனங்கள் இருந்தது தெரிஞ்சது.

ஆகா! நாம நெனச்சது கெடச்சுட்டு. கடவுளே கொண்டாந்து காணிச்சிட்டார். சரி, இவ குளிச்சி முடிக்கட்டும். இவளுக்குத் தெரியாமயே இவ பெறத்தால போவம். எந்த வீட்டுக்குள்ளாற நுழையிதாளோ அதெ கவனிச்சி வச்சிருந்து மொறப்படி போயி பொண்ணு கேட்டு கலியாணத்த முடிச்சிருவம்னு  தீர்மானிச்சி, அதே பிரகாரம் அவ குளிச்சிட்டுப் போயி நுழையிற அவ வீட்டையுங் கண்டுபிடிச்சிட்டாம்.

பெறகென்ன; போயி பொண்ணு கேட்டாம்.
ராசாவுக்கு பொண்ணுகேட்டா முடியாதுன்னு சொல்ல இயலுமா?
கலியாணம் முடிஞ்சது.

மொதநா ராத்திரி, பய ஆசையோட அவளெ கட்டிப்புடுச்சி முதுகெப் புடிச்சாம்.
என்னத்தெ எளவு ஒண்ணத்தையுங்காணம்?ன்னு அவக்கிட்டயவே கேட்டாம்.
அவளுக்கு சிரிப்பு வந்திட்டு. அட கோட்டிக்காரப்பய ராசா மவனேன்னு நெனச்சிக்கிட்டு.

‘மாட்டுக்கு வாலு பின்னாலே
மனுசனுக்கு பாலு முன்னாலே’ங்கிறது கூட ஒனக்குத் தெரியாதா?

மார்ல இருக்கவேண்டியது எங்கனாச்சும் முதுகில இருக்குமான்னு கேட்டா
ஏங்கண்ணாலயே பாத்தென ஒம் முதுகில இருந்த்தேன்னு கேட்டாம்
முன்னால இருந்த அதெத்தாம் நீ பின்னால பாத்தென்னா

இவனுக்கு வெளங்கல.

பெறவு அவதாம் வெளக்கமாச் சொன்னா

ஒடம்ப நல்லாத் தேய்ச்சிக் குளிக்கணும்னுட்டுதாம் அவ அந்த காட்டுக் குளத்துக்குப் போவாளாம். வயித்துக்குச் கீழெயெல்லாம் தேச்சிக் குளிக்க இதுக ரெண்டும் எடைஞ்சலா இருக்கும்னுட்டு அதுகள ரெண்டு தோள்களுக்கும் மேலே எடுத்துப் போட்டுக்கிடுவாளாம். அதுக முதுகில கிடக்கும்போது பாத்துட்டு பய சரியாப் பாக்காம முதுகுலதாம் இருக்கும்னுட்டு நெனச்சிக்கிட்டா நாம என்ன செய்யிறதுன்னு கேட்டாளாம்

No comments: